Shiva Temples of Tamilnadu

தேவார பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்


கிருபாபுரீஸ்வரர் திருக்கோவில், திருவெண்ணைநல்லூர்

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருவெண்ணைநல்லூர்
இறைவன் பெயர்கிருபாபுரீஸ்வரர், தடுத்து ஆட்கொண்ட நாதர், வேணுபுரீஸ்வரர்
இறைவி பெயர்வேற்கண்ணி அம்மை, மங்களாம்பிகை
பதிகம்சுந்தரர் - 1
எப்படிப் போவது மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலமான திருக்கோவிலூரில் இருந்து தென்கிழக்கே சுமார் 20 கி.மி. தொலைவிலும், விழுப்புரத்திலிருந்து 22 கி.மீ. தொலைவிலும் பெண்ணையாற்றின் தென்கரையில் திருவெண்ணைநல்லூர் தலம் அமைந்துள்ளது. திருக்கோவிலூரில் இருந்து அரசூர் செல்லும் சாலையில் சென்று இத்தலத்தை அடையலாம். விழுப்புரம், உளுந்தூர்பேட்டை மற்றும் திருக்கோவிலூரில் இருந்து இங்கு வர நேரடிப் பேருந்துகள் உள்ளன. கோவில் அருகில் உள்ள பேருந்து நிறுத்தம்: கடைத்தெரு. விழுப்புரத்தில் இருந்து 135 எண் கொண்ட பேருந்து திருவெண்ணெய் நல்லூர் செல்கிறது. திருக்கோவிலூரில் இருந்து மட்டுமே அதிகமான பேருந்துகள் இயக்கபடுகிறது. பேருந்து நிறுத்தத்தில் இருந்து 350 மீட்டர் தொலைவில் கோவில் அமைந்துள்ளது.
அருகில் உள்ள தலங்கள்1. திருக்கோவிலூர் - 23 கீ.மீ. -
2. திருவிடையாறு - 5 கீ.மீ. -
3. திருமுண்டீச்சரம் - 5 கீ.மீ. -
ஆலய முகவரிஅருள்மிகு கிருபாபுரீஸ்வரர் திருக்கோவில்
திருவெண்ணைநல்லூர் அஞ்சல்
திருக்கோயிலூர் வட்டம்
விழுப்புரம் மாவட்டம்
PIN - 607203
நடை திறப்புகாலை 6.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை


நடு நாடு - பயண குறிப்புகள் - முதலில் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருக்கோவிலூர் செல்லும் பேருந்தில் ஏறி அரகண்ட நல்லூர், திருக்கோவிலூர் தரிசித்து விட்டு, திருக்கோவிலூரில் இருந்து கடலூர் திருவெண்ணெய் நல்லூர் செல்லும் பேருந்தில் ஏறி முதலில் இடையாறு தலத்தையும், பிறகு திருவெண்ணெய் நல்லூர் சென்று, அங்கிருந்து திருமுண்டீச்சரம் சென்று தரிசனம் செய்து அரசூர் வழியாக மீண்டும் விழுப்புரம் அடையலாம்.


படிக்கும் நேரம் - நிமிடங்கள்

கோவில் அமைப்பு: இவ்வாலயம் சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு இராஜகோபுரத்துடனும் இரண்டு பிராகாரங்களுடனும் அமைந்துள்ளது. கோபுரம் கடந்து உள்ளே நுழைந்தால் சுந்தரர் வழக்கு நடந்த வழக்கு தீர்த்த மண்டபம் உள்ளது. அடுத்து செப்புக் கவசமிட்ட கொடிமரம், கொடிமர விநாயகர், பலிபீடம் ஆகியவை உள்ளன. நேரே உயரத்தில், மேலே, சுந்தரருக்கு இறைவன் ரிஷபாரூடராகக் காட்சி தந்த விமானக் கோயில் உள்ளது. அதற்கு எதிரில் கீழே சுந்தரர் சந்நிதி உள்ளதையும் காணலாம். இவ்வுருவத்தில் சுந்தரர் கையில் ஓலையுடன் காட்சியளிக்கிறார். இத்தல மூலவர் சுயம்பு லிங்கமாக கிருபாபுரீஸ்வரர் என்ற பெயருடன் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். அம்மன் மங்களாம்பிகை சந்நிதியும் கிழக்கு நோக்கியே உள்ளது. கோவிலின் தென்புறம் தண்டதீர்த்தம் உள்ளது. உட்பிராபாரத்தில் பொள்ளாப் பிள்ளையார், முருகன், சுந்தரர் சந்நிதிகள் உள்ளன.

கோஷ்ட மூர்த்தங்களாகப் பிட்சாடனர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், மகாவிஷ்ணு, துர்க்கை ஆகியோர் உள்ளனர். சண்டேசுவரர் சந்நிதி உள்ளது. வெளிச்சுற்றில் அறுபத்துமூவர் திருமேனிகளையடுத்து வரிசையாக சப்தமாதர்களும், சம்பந்தர், மகாவிஷ்ணு, அருணந்திசிவம், மெய்கண்டதேவர் திருமேனிகளும் உள்ளன. உட்புறத் தூண்களில் பைரவர், தட்சிணாமூர்த்தி சிற்பங்கள் உள்ளன.



இளைவன் நஞ்சுண்ட காலத்தில் அந்நஞ்சு அவரை துன்புறுத்தாமலிருக்க உமையம்மை இத்தலத்தில் பசு வெண்ணெயால் கோட்டை கட்டி அதில் பஞ்சாக்கினி வளர்த்து அதன் நடுவிலிருந்து தவம் செய்த காரணத்தால் இத்தலம் வெண்ணெய்நல்லூர் எனப் பெயர் பெற்றதெனத் தலபுராணம் கூறுகிறது.

இறைவன் சிவபெருமான் சுந்தரரை தடுத்தாட்கொண்ட சிறப்புடையது இத்தலம். இறைவன் முதிய வேதியராய் வந்து வழக்குரைத்து சுந்தரர் தனக்கு அடிமை என்று நிரூபித்து தன்னுடன் அழைத்துச் சென்று அவரை ஆட்கொண்டார். இறைவன் அடியெடுத்துத் தர சுந்தரர் பித்தா பிறைசூடி பெருமானே என்ற திருப்பதிகத்தை அருளிய தலம். ஆகையால் இறைவனுக்கு தடுத்து ஆட்கொண்ட நாதர் என்ற பெயரும் உண்டு. தலத்தின் பெயர் திருவெண்ணெய்நல்லூர் என்றும் கோவிலின் பெயர் அருட்டுறை என்றும் பதிகத்தில் குறிப்பிடப் பெறுகிறது. இறைவன் சுந்தரரை ஆட் கொள்ள வந்த போது அவர் அணிந்து வந்த காலணிகளை கோவிலின் வெளியில் விட்டு சென்றார். அந்த காலணிகளை மூலவர் அருகில் உள்ள கண்ணாடி கூண்டில் இன்றும் தரிசிக்க முடியும்.


சுந்தரர் வழக்கு தீர்த்த மண்டபம்

அருணகிரிநாதர் இத்தலத்தில் முருகப் பெருமான் மயில்மீது நடனம் புரிதலைக் கண் குளிரக் கண்டு திருப்புகழ் ஒன்றும் பாடியுள்ளார்.

சுந்தரர் பாடிய இத்தலப் பதிகம் 7-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. இவர் பாடிய முதல் பதிகம் என்ற சிறப்பும் இப்பதிகத்திற்கு உண்டு.


சுந்தரர் அருளிய இத்தலத்து பதிகம்

  1. பித்தாபிறை சூடீபெரு மானே

அருணகிரிநாதர் அருளிய இத்தலத்து திருப்புகழ்

  1. பலபல தத்துவ மதனை
கிருபாபுரீஸ்வரர் ஆலயம்
புகைப்படங்கள்

ஆலயத்தின் வெளித் தோற்றம்
வள்ளி தெய்வானையுடன் முருகர்
கோபுரம் கடந்தவுடன் உள்ள முன் மண்டபம்
ஆலயம் உள் தோற்றம்
63 மூவர் அணிவகுப்பு
ஸ்தல வ்ருக்ஷம்
சப்த கன்னியர்
இறைவன் சந்நிதி விமானம்
அருணந்திசிவம்
பைரவர்