Shiva Temples of Tamilnadu

தேவார பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்


நெய்யாடியப்பர் திருக்கோவில், திருநெய்த்தானம்

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருநெய்த்தானம் (தில்லைஸ்தானம்) - தஞ்சாவூர் மாவட்டம்
இறைவன் பெயர்நெய்யாடியப்பர்
இறைவி பெயர்இளமங்கையம்மை, பாலாம்பிகை
பதிகம்திருநாவுக்கரசர் - 5
திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது திருவையாறு - திருக்காட்டுப்பள்ளி சாலையில் திருவையாற்றில் இருந்து மேற்கே சுமார் 1.5 கி.மீ. தொலைவில் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது.
அருகில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலம்1. திருப்பழனம் - 5 கிமி -
2. திருவையாறு - 2.2 கிமி -
3. திருவாலம்பொழில் - 8.4 கிமி -
4. திருப்பூந்துருத்தி - 7.5 கிமி -
5. திருக்கண்டியூர் - 4 கிமி -
6. திருசோற்றுத்துறை - 8 கிமி -
7. திருவேதிகுடி - 7.7 கிமி -
8. திருப்பெரும்புலியூர் - 3 கிமி -
அருகில் உள்ள தேவார வைப்புத் தலம்1. திங்களூர் - 5.8 கிமி -
அருகில் உள்ள திவ்ய தேசம்1. ஸ்ரீ ஹர சாப விமோசனப் பெருமாள் கோயில், திருக்கண்டியூர் - 4 கிமி -
ஆலய முகவரிஅருள்மிகு நெய்யாடியப்பர் திருக்கோவில்
தில்லைஸ்தானம் அஞ்சல்
தஞ்சாவூர் மாவட்டம்
PIN - 613203

இவ்வாலயம் தினமும் காலை 10 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையும் திறந்திருக்கும்.

படிக்கும் நேரம் - நிமிடங்கள்

கோவில் அமைப்பு: திருநெய்த்தானம் திருவையாற்று சப்தஸ்தான தலங்களில் ஏழாவது தலம். திருவிழா காலத்தில் ஏழூர் பல்லக்குகளையும் ஒரே இடத்தில் கண்டு களிக்கும் சிறப்புடைய தலம். நெய்யாடியப்பர் ஆலயம் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறது. கிழக்கு நோக்கிய 5 நிலை இராஜகோபுரம் வழியாக உள்ளே நுழைந்தவுடன் விசாலமான வெளிப் பிரகாரம் இருக்கிறது. இராஜகோபுரத்திற்கு நேரே உள்ள கொடிமரம், பலிபீடம், நந்தியைத் தாண்டி உள் வாயில் வழியாகச் சென்றால் மூலவர் நெய்யாடியப்பர் சந்நிதி ஆலயத்தின் உட்பிரகாரத்தில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. உள் பிரகாரம் சுற்றி வலம் வரும்போது சூரியன், ஆதிவிநாயகர், சனி பகவான், சரஸ்வதி, மகாலட்சுமி, காலபைரவர், சந்திரன், ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன. கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, ஆகியோர் காட்சி அளிக்கின்றனர். தட்சினாமூர்த்தி இங்கு நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். கருவறையில் மூலவர் நெய்யாடியப்பர் சற்றே ஒல்லியான மற்றும் உயரமான லிங்கத் திருமேனியுடன் நமக்குக் காட்சி தருகிறார். இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். சிவனுக்கு நெய்யால் அபிஷேகம் ஆன பின்பு வெந்நீர் அபிஷேகம் நடப்பது தலத்தின் சிறப்பம்சமாகும்.

அம்பாள் சந்நிதி வெளிப் பிரகாரத்தில் தெற்கு நோக்கி அமைந்திருக்கிறது. அம்பாள் பாலாம்பிகை நின்ற கோலத்தில் நமக்கு அருட்காடசி தருகிறாள். காமதேனு, சரஸ்வதி மற்றும் கெளதம முனிவர் இங்கு சிவபெருமானை வழிபட்டுள்ளனர்.



திருப்புகழ் தலம்: இத்தலத்தில் உள்ள முருகப்பெருமான் அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப்பெற்றுள்ளார். மூலவர் கருவறை பிரகாரத்தில் மூலவருக்கு நேர் பின்புறம் மேற்குச் சுற்றில் இவர் சந்நிதி உள்ளது. முருகப்பெருமான் ஒரு திருமுகமும் நான்கு திருக்கரங்களும் கொண்டு நின்ற திருக்கோலத்தில் மயிலுடன் காட்சி தருகிறார். இருபுறமும் தேவியர் எழுந்தருளியுள்ளனர்


திருஞானசம்பந்தர் அருளிய இத்தலத்து பதிகம்

  1. மையாடிய கண்டன்மலை

திருநாவுக்கரசர் அருளிய இத்தலத்து பதிகம்

  1. காலனை வீழச் செற்ற
  2. பாரிடஞ் சாடிய பல்லுயிர்
  3. கொல்லி யான்குளிர்
  4. வகையெலா முடையாயும் நீயே யென்றும்
  5. மெய்த்தானத் தகம்படியுள் ஐவர் நின்று

அருணகிரிநாதர் அருளிய இத்தலத்து திருப்புகழ்

  1. முகிலைக் காரைச் சருவிய குழலது
நெய்யாடியப்பர் ஆலயம் புகைப்படங்கள்

5 நிலை இராஜகோபுரம்
கொடிமரம், நந்தி மண்டபம், பின்புறம் 2வது வாயில்
அம்பாள் தனிக்கோவில்
நந்தி மண்டபம், பின்னால் கொடிமரம்
2வது நுழைவாயில்
சுவாமி கருவறை விமானம்
வள்ளி தெய்வானை சமேத முருகர்
சுவாமி சந்நிதி முன் மண்டபம்
அஷ்டபுஜ துர்க்கை
இரண்டு தட்சிணாமூர்த்தி