துறைகாட்டும் வள்ளலார் திருக்கோவில், திருவிளநகர்
சிவஸ்தலம் பெயர்: திருவிளநகர்
இறைவன் பெயர்: துறைகாட்டும் வள்ளலார், உச்சிரவனேஸ்வரர்
இறைவி பெயர்: வேயுறு தோளியம்மை
பதிகம்: திருஞானசம்பந்தர் - 1
துறைகாட்டும் வள்ளலார் ஆலயம் புகைப்படங்கள்
எப்படிப் போவது
மயிலாடுதுறை - தரங்கம்பாடி சாலையில் மயிலாடுதுறையில் இருந்து 7 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது.
ஆலய முகவரி
அருள்மிகு உசிரவனேஸ்வரர் திருக்கோயில்
திருவிளநகர்
மயிலாடுதுறை வட்டம்
மயிலாடுதுறை மாவட்டம்
PIN - 609305
ஆலய நேரம்
காலை: 7:00 - 12:00
மாலை: 5:00 - 8:00
அருகில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலம்
| 1 | திருமயிலாடுதுறை - 6 கிமி | |
| 2 | திருப்பறியலூர் (பரசலூர்) - 3.3 கிமி | |
| 3 | திருச்செம்பொன்பள்ளி - 4.2 கிமி | |
| 4 | திருநனிபள்ளி (புஞ்ஜை) - 7.5 கிமி |
தீவினைகள் நீங்கி, துன்பமும் துயரமும் இல்லாமல் இருக்க, துறைக்காட்டும் வள்ளலார் கோவில், திருவிளநகர்.
மேலும் படிக்க....தல வரலாறு
அருள்வித்தனின் கதை
முன்னொரு காலத்தில் அருள்வித்தன் என்னும் அந்தணன் இத்தல இறைவன் மீது அளவில்லாத பக்தி கொண்டிருந்தான். நாள் தோறும் இறைவனுக்கு மாலை கட்டிக் கொடுக்கும் தொண்டினைச் செய்து வந்தான். இவனது பக்தியை சோதிக்க விரும்பினார் இறைவன். ஒருநாள் இவன் பூக்கூடையுடன் ஆற்றைக்கடந்து வரும்போது ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்படி செய்தார்.
இதனால் கலங்கிய இவன் தன்னைப்பற்றி கவலைப்படாமல் இறைவனுக்குரிய பூக்கூடையை காப்பாற்றுவதில் மிகவும் கவனமாக இருந்தான். தலையளவு வெள்ளம் வந்துவிட்ட போதிலும் தன் கைகளால் பூக்கூடையை தலைக்கு மேல் தூக்கிப் பிடித்துக் கொண்டு தன் உயிரைப் பற்றி கவலைப் படாமல் இறைவனுக்கு செய்யும் கொண்டில் பங்கம் வந்துவிடக் கூடாதே என்ற் கவலைப்பட்டான். அவனுடைய உறுதியையும், அன்பையும் கண்ட இறைவன் அவனுக்கு அருள் சொரிந்து ஆற்றின் துறையைக் காட்டி அவனைக் கரையேறச் செய்தார். இதனால் இறைவன் "துறை காட்டும் வள்ளல்" ஆனார்.
திருஞானசம்பந்தரின் அனுபவம்
சம்பந்தர் ஒருமுறை இத்தலத்திற்கு விஜயம் செய்ய வந்தபோது காவிரி ஆறு கரைபுரண்டு ஓடுவதைப் பார்த்து கரையிலேயே நின்று பரிதவித்தார். துறை காட்டுபவர் யாரேனும் உள்ளார்களா என்று சுற்றுமுற்றும் பார்த்த இவரை வேடன் ஒருவன் தன்னைப் பின்தொடர்ந்து வரும்படி சொல்லி ஆற்றில் இறங்கினான்.
சம்பந்தரும் அவனைப் பின்தொடர்ந்து ஆற்றில் இறங்க வெள்ளம் பிரிந்து அவர்களுக்கு வழி விட்டது. மறுகரை சேர்ந்த சம்பந்தர் நன்றி சொல்ல வேடனைத் தேட அவன் மாயமாய் மறைந்து விட்டதைக் கண்டார். இறைவனே வேடனாய் வந்து துறை காட்டியதால் அவர் துறை காட்டும் வள்ளலார் என்று அழைக்கப்படுகிறார்.
ஆன்மீக முக்கியத்துவம்
துறைகாட்டும் வள்ளல் அருள் நமக்கிருந்தால் பிறவிப் பெருங்கடலைச் சுலபமாகக் கடக்கலாம். சிறப்பும் இனிமையும் பொருந்திய இப்பதிகத்திலுள்ள இப்பாடல்களைக் தினந்தோறும் கூறி ஏத்துகின்றவர் வினைகள் நீங்கித் துன்பமும் துயரமும் அடைய மாட்டார்கள், அவர்கள் தூய நெறியைப் பெறுவார்கள் என்று திருஞானசம்பந்தர் தனது பதிகத்தின் கடைசி பாடலில் குறிப்பிடுகிறார்.
கோவில் அமைப்பு
சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த 5 நிலை ராஜகோபுரம் கொண்டது துறை காட்டும் வள்ளலார் கோவில். இக்கோவில் 2 பிரகாரங்களைக் கொண்டது. இரண்டாவது பிரகாரத்தில் சிறிய நந்தி மண்டபமும், ஆஸ்தான மண்டபமும் இருக்கின்றன.
2-வது கோபுரம்
2-வது கோபுர வாசலின் இருபுறமும் விநாயகர் காணப்படுகிறார். மூலவர் கிழக்கு நோக்கியபடி காட்சி தருகிறார்.
இறைவி சந்நிதி
இறைவி வேயுறுதோளியம்மை தனது திருக்கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தி காட்சி தருகிறாள்.
பிற சந்நிதிகள்
மேற்குப் பகுதியில் சோமஸ்கந்தர், ஆறுமுகன், அருணாசலேஸ்வரர் ஆகியோருக்கு சந்நிதிகள் உள்ளன. வடக்குப் பிரகாரத்தில் நடராஜர், கிழக்கில் நவக்கிரக சந்நிதி, சூரியன், பைரவர் ஆகியோருக்கும் சந்நிதிகள் உள்ளன.
மேலும் புகைப்படங்கள்