இந்த வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகப் பாடலில் கூறப்பட்டுள்ள அரணநல்லூர், கரபுரம் ஆகியவையும் தேவார வைப்புத் தலங்களாகும்.
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
| தகவல் பலகை | |
|---|---|
| சிவஸ்தலம் பெயர் | திருவேட்டி (இன்றைய நாளில் திருவல்லிக்கேணி என்று பெயர் - சென்னை நகரின் ஒரு பகுதி) |
| இறைவன் பெயர் | திருவேட்டீஸ்வரர் |
| இறைவி பெயர் | செண்பகாம்பிகை |
| பதிகம் | அப்பர் (6-7-7) |
| எப்படிப் போவது | சென்னை நகரின் ஒரு பகுதியான திருவல்லிக்கோணியில் இத்தலம் உள்ளது. திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையிலுள்ள தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள பிள்ளையார் கோவில் தெருவில் சென்று இக்கோவிலை அடையலாம். |
| ஆலய முகவரி |
அருள்மிகு திருவேட்டீஸ்வரர் திருக்கோவில் பிள்ளையார் கோவில் தெரு திருவேட்டீஸ்வரன்பேட்டை திருவல்லிக்கோணி சென்னை PIN - 600005 இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும் |
அப்பரின் 6-ம் திருமுறையில் 7-வது பதிகத்தில் 7-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது..
சீர்காழி வல்லம் திருவேட்டியும் உண்ணீரார் ஏடகமும் ஊறல் அம்பர் உறையூர் நறையூர் அரணநல்லூர் விண்ணார் விடையார் விளமர் வெண்ணி மீயச்சூர் வீழிமிழலை மிக்க கண்ணார் நுதலார் கரபுரமும் காபாலியார் அவர் தம் காப்புக்களே. பொழிப்புரை : அதிகை வீரட்டம், சீர்காழி, வல்லம், திருவேட்டி, நீர்வளம் மிக்க ஏடகம், ஊறல், அம்பர், உறையூர், நறையூர், அரணநல்லூர், வானத்திலும் உலவும் காளை வாகனம் உடைய சிவபெருமான் உகக்கும் விளமர், வெண்ணி, மீயச்சூர், வீழிமிழலை, நெற்றிக்கண்ணனாம் சிவபெருமான் விரும்பும் கரபுரம் ஆகியவை மண்டை ஓட்டினை ஏந்தும் அப்பெருமான் உகந்தருளியுள்ள திருத்தலங்களாம்.
| திருவேட்டி திருவேட்டீஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள் | ||
|---|---|---|
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |