இந்த வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகப் பாடலில் கூறப்பட்டுள்ள ஆழியூர், கீழையில், கிள்ளிகுடி ஆகியவையும் தேவார வைப்புத் தலங்களாகும்.
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
| தகவல் பலகை | |
|---|---|
| சிவஸ்தலம் பெயர் | திருமலை (இன்றைய நாளில் திருமலைராயன்பட்டிணம் என்று பெயர். மக்கள் வழக்கில் சுருக்கமாக திருபட்டிணம் என்று அழைக்கின்றனர்.) |
| இறைவன் பெயர் | ராஜசோளீஸ்வரர் |
| இறைவி பெயர் | அபிராமி |
| பதிகம் | சுந்தரர் (7-12-7) |
| எப்படிப் போவது | காரைக்காலில் இருந்து நாகூர் செல்லும் பேருந்து சாலையில் காரைக்காலில் இருந்து தெற்கே சுமார் 9 கி.மீ. தொலைவில் திருமலைராயன்பட்டிணம் உள்ளது. பிரதான சாலையிலிருந்து சற்று உள்ளடங்கி சுமார் அரை கி.மீ. தொலைவில் கோவில் உள்ளது. |
| ஆலய முகவரி |
அருள்மிகு ராஜசோளீஸ்வரர் திருக்கோவில் திருமலைராயன்பட்டிணம் திருமலைராயன்பட்டிணம் அஞ்சல் வழி காரைக்கால் புதுச்சேரி மாநிலம் PIN - 609606 இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும் |
சுந்தரரின் 7-ம் திருமுறையில் 12-வது பதிகத்தில் 7-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது.
ஈழநாட்டு மாதோட்டம் தென்னாட்டு இராமேச்சுரம் சோழ நாட்டுத் துருத்தி நெய்த்தானம் திருமலை ஆழியூரன நாட்டுக்கெல்லாம் அணியாகிய கீழையில் அரனார்க்கு இடம் கிள்ளிகுடி யதே. பொழிப்புரை : சிவபெருமானாருக்கு உரிய தலங்கள், ஈழநாட்டில் உள்ள மாதோட்டம், தென்னாட்டில் உள்ள இராமேச்சுரம், சோழநாட்டிலுள்ள துருத்தி, நெய்த்தானம், ஆழியூர், திருமலை, நாட்டுக்கெல்லாம் அணியாய் விளங்கும் கீழையில், கிள்ளிகுடி என்பவை.
| திருமலைராயன்பட்டிணம் ராஜசோளீஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள் | ||
|---|---|---|
சுவாமி சந்நிதி முன் கொடிமரம் |
63 நாயன்மார்கள் சிலாஉருவங்கள் |
சுவாமி சந்நிதி நுழைவாயிலில்துவாரபாலகர்கள் |
மூலவர் ராஜசோளீஸ்வரர் |
பிரதான விநாயகர் சந்நிதி |
ஆலயத்தின் உள்புறத் தோற்றம் |
தந்தைக்கு உபதேசம் செய்யும் முருகர் |
கந்தசஷ்டி விழாவில் மயில் வாகனத்தில்முருகரின் அழகான தோற்றம் |
|